ஹொரண – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கான அறிவிப்பு

ஹொரண – கொழும்பு பிரதான வீதியின் கொஹுவல சந்தியில் பொதுப் போக்குவர்த்து பேருந்துகள் தவிர வேறு வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை (21) முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரையில் இவ்வாறு குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொஹுவல மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுனர்களிடம் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here