நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை (16) நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இதன்படி, நாளை (16) இரவு 8.30க்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதியின் விசேட உரை, இலத்திரனியல் ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
அதேவேளை, சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதியின் விசேட உரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது