FACEBOOKற்கு அதிரடி தடை விதிப்பு போலி தகவல் பரப்புவதாக குற்றச்சாட்டு

தமது நாட்டிற்குள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை மூடக்குவதற்கு ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைனுடனான யுத்தம் தொடர்பில், பேஸ்புக் போலி தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தே, ரஷ்ய அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் பிரஜைகள் அகதிகளாக இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here