இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் வியாபாரிகள் ஐவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பேசாளை பிரதேசத்தில் வசிக்கும் 33 மற்றும் 45 வயதிற்குட்பட்ட ஐவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடைப்படை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வியாபாரிகள் நிண்ட காலமாக சர்வதேச கடல் எல்லையை மீறி போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு உள்நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.