இலங்கை, உள்நாட்டு வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியாலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் வாகன இறக்குமதிக்கு முன்பதாக பருப்பு இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்தவதாகவும் வாகனங்களை உள்நாட்டில் எப்படியாவது ஒரு கார் உற்பத்தி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலத்திரனியல் வாகன உற்பத்தி தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 4 வது நாடாளுமன்றின் இரண்டாவது வாசிப்பின போது தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.