2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியி தேர்தலில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 94 இலட்சம் ரூபா செலவில் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் கொண்ட 5 மில்லியன் கடிதங்களை அச்சிட்டு விநியோகித்தமை தொடர்பில் குற்றச்சாட்டப்படிருந்த நிதி அமைச்சர் பசில் ராஸபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கே ஆகியோர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தால் பயணத்தடைகள் ஏதேனும் விதிக்கப்பட்டிருந்தால் அவர்களை மனு கோரிக்கை மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.