சதோச நிறுவனம் இன்று முதல் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியை 105.00 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பா ஒரு கிலோவின் விலையை 128.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று அரிசியின் விலையை கண்காணிப்பதற்காக புறக்கோட்டையிலுள்ள மொத்த வர்த்தக நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.