ஆபிரிக்க நாடுகளை தாக்கியுள்ள புயல் – 70 பேருக்கு மேல் பலி

தெற்கு ஆபிரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டல புயல் தாக்கியதால் உண்டான மழை வெள்ளத்தால் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவு நாடான மடகஸ்காரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 1,30,000 பேர் தங்களது வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

மலாவி நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு பல இடங்கள் பேரழிவு நிகழ்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மாலாவியில் நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
மொசாம்பிக்கில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் வெளிவரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here