பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறான வதந்திகளுக்கு பதிலளித்துக் கொண்டு இருக்க முடியாது எனவும் அதற்காக அரசாங்கம் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.