நாட்டில் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கொவிட் தொற்றும் நாட்டில் அதிகரித்து வருவதால் டெங்கு மற்றும் கொவிட் நோய்க்கான ஆரம்ப நோய் அறிகுறிகள் ஒத்தவை என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசேடமாக 24 மணித்தியாலங்களுக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பின் அது டெங்கு அல்லது கொவிட் நோய்க்கான அறிகுறியாக இருக்க கூடும் என்பதால் வைத்திய ஆலோசனையை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.