காற்று மாசடைதலை தடுத்தல் மற்றும் மேலும் சில காரணிளை கருத்திற்கொண்டு சைக்கிள் பாவனையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை அனுமதி பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒவ்வொரு வீதியிலும் சைக்கிள் ஓட்டுவதற்கான ஒரு பாதையை ஒதுக்குவதுடன் சுற்றுச் சூழல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிளில் வேலைக்கு வருபவர்களுக்காக ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.