நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியினை கையாளும் விதமாக மின்சார பாவனையை குறைப்பதற்கான யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தெருக்களில் உள்ள மின் விளக்குகளை அணைத்து வைப்பது மற்றும் அலுவலகங்களின் மின் உபகரண பாவனைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட யோசனைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக மின் வலு அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.