கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் நோய் பரவும் அபாயம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 30 வீதமானவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் காலாவதி திகதி ஒன்று இருக்கின்றமையால் காலாவதியாகும் முன்னர் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.