அண்மையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர மெரினா உல்லாசப் நடை பாதையை பார்வையிட பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.
கடந்த எட்டு நாட்களில் மொத்தம் 89,540 பேர் கொழும்பு போர்ட் சிட்டி மெரினா நடை பாதை பகுதிக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏராளமான மக்கள் அந்த இடத்திற்கு வருகை தந்ததை அடுத்து பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கான வாயில்களை மூட வேண்டிய நிலை பாதுகாப்பு துறையினருக்கு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.