சீனாவின் உதவியுடன் இலங்கை தற்கால கடின நிலைமைகளில் இருந்து வெளிவரும் என சீனாவின் வெளிநாட்டு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வங் வென்பிங் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாது எனவும் ஆயினும் இலங்கையின் இக்கட்டான சூழ்நிலைகளின் போது இலங்கைக்கு தேவையான உதவிகளை எப்போதும் வழங்க சீனா தயாராக இருப்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.