விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி.

விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி.

சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர் காயமடைந்து இருந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்து, உயிரிழப்பு நான்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சார்ஜனை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார். அவருக்கு விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்தனர் . வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

AAM.SAMEER (JMMC10)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here