சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

டிசம்பர் மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47 120 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையில் 152 109 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஊக்குவிப்பு மூலம் அடுத்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here