கடலில் மூழ்கியுள்ள எக்ஸ் ப்ரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
மேலும் எக்ஸ் பிரஸ் பேர்ள் நிறுவனமானது குறித்த பணிகளிற்கான பொறுப்பை வேறு இரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை கப்பலின் சிதைவுகளை அகற்றும் பணி ஷாங்காய் சால்வேஜ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பணிகள் டிசம்பர் 19 அம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.