ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
14 மாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் இடிபாடுகளை அகற்றுவதில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
ஆறுமாத குழந்தை உட்பட 20 சிறுவர்கள் கொல்லபட்பட்டுள்ளனர் பல உடல்கள் இடிபாடுகளிற்குள் உள்ளன என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.