அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அனுமதி!

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கொலன்னாவ மற்றும் நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (03) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொலன்னாவை உட்பட கொழும்பு நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி நேற்று (03) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது பிரதேசவாசிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாக நிலவும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here