மக்கள் போராட்ட இயக்கம் கொழும்பில் நேற்று (20) நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரதன தேரர் மற்றும் பெண் ஒருவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேலும் 5 பேரையும் நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.