முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முருதவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று இரவு திறக்கப்பட வாய்ப்புள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக முருதவெல நீர்த்தேக்கத்திற்கு கீழே உள்ள ஊருபொக்கு ஓயாவின் இருபுறமும் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
