ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் l ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டு ஓரிரு தினங்களிலேயே மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று பதிவான நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இந்த நிலநடுக்கத்தினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில்  ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 2400ற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், மேலும் 2000ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here