சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது.

0
4

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (26) உறுதியளித்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தலை வழங்கினார்.

குறித்த வழக்கு ஜூலை மாதம் 6 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here