கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இரவு 10.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மஹாகனதரவ, ஹக்மன, பல்லேகலை மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
புபுரஸ்ஸ பிரதேசம் இதன் மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
