Home LOCAL மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி?

மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி?

0

பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தற்போதுள்ள வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக பலருடைய பெயர்கள் முன்மொழியப்படும் தற்போதைய சூழ்நிலை பாராளுமன்றத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்மொழியப்பட்ட மூன்று வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும் அது பிளவை உருவாக்கும் எனவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு தனி வேட்பாளரை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி முன்மொழிவதே சிறந்த மாற்று வழி எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு இனி வரப்போகும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒரு பிரச்சினையாகவே முடிவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும், வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வரும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here