உக்ரேனின் எல்லைகளில் இருந்து தமது படையினரை நீக்கிவிட்டதாக ரஷ்யா தெரிவித்திருந்த கூற்று பொய்யானது என அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த படையினரை நீக்குவதாகக் கூறி மேலும் 7 000 பேரை குறித்த எல்லையில் நிறுத்தியுள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஷ்யா, இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிட்டு எந்த நேரத்திலும் உக்ரேன் மீது படையெடுக்க எத்தனிக்கும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனின் எல்லைகளில் சுமார் 100 000 படையினரைக் கொண்டுள்ள ரஷ்யா, உக்iரைன் மீது படையெடுக்கவோ அல்லது யுத்தம் செய்யவோ முயற்சிக்கவில்லை என தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.
ஆயினும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் உக்ரைன் மீதான தாக்குதலுக்காக இருக்கலாம் என ஏனைய நாடுகள் சந்தேகித்து வரும் நிலையில் அவ்வாறான யுத்தம் ஒன்று இடம் பெறுமானால் ரஷ்யா மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா தயார் எனவும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.