பிப்ரவரி 16ஆம் தேதி ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
”மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன் அதிபர் உறுதிசெய்யவில்லை; அந்தச் செய்திகள் குறித்து சந்தேகம் வெளியிடும் நோக்கிலேயே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இவ்வாறு மக்களிடம் கோரியுள்ளார்,” என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே யுக்ரேன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு படைகள் தங்களது நிலைக்கே மீண்டும் திரும்பி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.