அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னான்டோ கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் அவுஸ்திரேலிய தொடருடனான போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதனிடையெ அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டி தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடரில் 1 க்கு 0 என்ற விகிதத்தில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.