அவுஸ்திரேலிய தொடரின் இரண்டாவது போட்டி இன்று – வீரர் ஒருவருக்கு கொவிட்

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னான்டோ கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அவுஸ்திரேலிய தொடருடனான போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனிடையெ அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டி தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொடரில் 1 க்கு 0 என்ற விகிதத்தில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here