2025 ஆம் ஆண்டில் நடாத்தப்படும் ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயமாக வெற்றி பெறுவார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தற்போது வரையில் பல்வேறு வேட்பாளர்கள் உருவாகியுள்ளதாகவும், அவர்கள் எவருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான நோக்கம் இல்லை எனவும் ஆட்சியை பெற்றுக் கொள்வதே அவர்களின் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.