பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஹஸ்னைனுக்கு சர்வதேக கிரிகெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் பந்து வீசும் பாணி சட்டவிரோதானது என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை விதிப்பதாக சர்வதேச கிரிகெட் பேரவை நேற்று அறிவித்துள்ளது.
ஹஸ்னைன் பந்து வீசும் போது 15 பாகைக்கு மேலாக கையை வளைப்பதாக பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் அவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.