டுபாயில் அறிமுகமாகும் பறக்கும் படகு

சுவிசர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு டுபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ‘தி ஜெட்’ என பெயரிடப்பட்டுள்ளது. சொகுசு படகாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் படகில் 8 முதல் 12 பேர் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஹைட்ரன் எரிசக்தியால் இயங்கும் இந்த படகின் வெள்ளோட்டம் விரைவில் டுபாய் கடல் பகுதியில் நடைபெறவுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த படகு பயணிக்கும் போது எவ்வித சத்தமும் எழுப்பாது எனவும் கடல் நீரிலிருந்து 80 சென்றி மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த படகு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here