எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு இருக்காது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 3000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமையினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 22 ஆம் திகதி வரையில் தேவைப்படும் எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் நாளை (17) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.