மக்களுடைய வாழ்கையைப் பாதிக்காத வகையில் மின் விநியோகத் தடைக்கு ஒரு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மின்விநியோகத் தடை தொடர்பில், வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்களிட்கிடையிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது எரிபொருள் உற்பத்தி ஆற்றலை கட்டுப்படுத்துவதன் மூலம் மின்சாரத்தடையை தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த அமைச்சுக்கள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.