சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் பதவி விலகினார்

சூடானின் தலைநகர் கார்டூமில் மீண்டும் இடம்பெற்ற போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒக்டோபரில் ஆட்சிக் கவிழ்ப்பை நடாத்திய இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஹம்டொக்கின் பதவி விலகல் இராணுவத்தினரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் நாட்டைக் கொண்டு வந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here