பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது தொடர்பில் பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருலப்பனை, பாதுக்க, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் மேற்க்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்கள் விநியோகிக்கும் பல இடங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
5000.00ரூபா மற்றும் 1000.00 ரூபா போலி நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடும் இயந்திரங்கள் மேலும் பல உபகரணங்களுடன் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதில் சந்தேகநபர்கள் கவனம் செலுத்தி வருவதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்தலின் பொது பணப்பரிவர்த்தனைகளில் ஈடுப்படும் வேளையில் பொதுமக்கள் மற்றும் விற்பனை நிலைய உரிமையாளர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களை மாற்ற முயற்சிக்கும் சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பொலிஸாரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.