நுவரெலியா நகரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வைக் கோரி மாணவ, மாணவிகளின் பொற்றோர்கள் இன்று பேரணியுடனான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை உறுதி படுத்தவும் , சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி பதாதைகளை ஏந்தியவாரும்,கோஷங்களை எழுப்பியவாறும் இப் போராட்டம் நடைபெற்றது.
நுவரெலியாவில் உள்ள நல்லாயன் மகளிர் கல்லூரி மற்றும் புனித சவாரியர் கல்லூரி ஆகியவற்றின் பொற்றோர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Jmmc/10/08