மின்சார தடை தொடர்பான தீர்மானம் நாளை

நாளை (03) இடம்பெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து தங்களது போராட்டம் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்படும் என மின்சார சபையின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிபொருள், துறைமுக மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் நாளை (03) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

நாளை இடம்பெறுவது வேலைநிறுத்தமல்ல எனவும் இது ஆர்ப்பாட்டம் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் வேலைநிறுத்தம் எப்போது என அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here