தற்போதைய பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here