இலங்கையில் செயல்படுத்தப்பட உள்ள இரண்டு காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து கௌரவத்துடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கான அதன் அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது என்றும், இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷைகளின் அடிப்படையில் எதிர்கால திட்டங்களுக்காக தமது நிறுவனம் திறந்திருப்பதாகவும் அதானி குழுமம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.