ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (04) நடைபெறவுள்ளது.
இன்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே தினம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையில் அண்மையில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானதுடன் இது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களில் பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு பெசில் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ள நிலையில், இந்த கவனம் மேலும் அதிகரித்துள்ளது.