கண்டி – பேராதனை – குஹாகொட ஊடான கட்டுகஸ்தோட்டை வீதி அதிவுயர் அபாயகரமான வீதி என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தானால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில், இந்த வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ நிலையம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.