அமெரிக்கா – கனடா எல்லையின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமானது, பயங்கரவாதத்துடன் தொடர்பு கிடையாது என நியூயோர்க் ஆளுநர் கத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நயாகரா நீர்வீழ்ச்சியின் ரெயின்போ பாலத்தில் வாகனமொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து, குறித்த எல்லை பகுதியின் அனைத்து பகுதிகளும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த வெடிப்பு சம்பவத்திற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையில் தொடர்புள்ளமைக்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது என நியூயோர்க் ஆளுநர் கத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.