2024ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை கல்வி தவணை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
இந்த வருடத்தின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடையும் என்பதுடன், இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமானது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.