சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதால் உயிரிழந்த முஹம்மது ஹம்தினுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
“செயலிழந்த சிறுநீரகத்துடன் மற்றைய சிறுநீரகம் பிறப்பிலேயே ஒட்டியிருந்ததாலேயே இரு சிறுநீரகமும் செயலிழந்திருக்கும் என நான் எண்ணுகிறேன். அதன் காரணமாகவே செயலிழந்த சிறுநீரகத்தை அகற்றும்போது மற்றைய சிறுநீரகமும் நீக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் சிறுவனின் பெற்றோரிடமிருந்து எனக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை.
மேலும், சத்திர சிகிச்சை மேற்கொண்டு 7 மாதங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இருப்பினும், அதன் பின்னர் சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் பிரதிப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.” என்றார்.
