இன்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போது சந்தையில் 2,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து மூடையின் புதிய விலை 2,300 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்
