மோடிக்கு எதிராக போராட்டம் – 600 பேர் மீது வழக்கு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழக காங்கிரசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 600 பேர் வரை திரண்டு மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். கருப்பு சட்டை அணிந்தும் பங்கேற்றிருந்தனர்.

இந்த போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடந்தது. இதை அடுத்து அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர் பொலிஸ் சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here