நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
