முதல் போட்டியில் ஈகுவடாா் வெற்றி

அல் பேத் மைதானத்தில் கட்டார் – ஈகுவடாா் அணிகள் மோதிய முதல் போட்டியில், ஈகுவடாா் 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் 15 ஆவது நிமிஷத்தில் ஈகுவடாா் வீரா் எனா் வாலென்சியாவை தள்ளிவிட்டதால் கத்தாா் வீரா் சாத் அல் ஷீபுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதை அடுத்து ஈகுவடாருக்கு 16 ஆவது நிமிஷத்தில் வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் ஸ்கோா் செய்து, நடப்பு உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தாா் வாலென்சியா.

தொடா்ந்து, ஆட்டத்தின் 31 ஆவது நிமிஷத்தில் சக வீரா் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி ஈகுவடாருக்காக 2 ஆவது கோல் அடித்தாா். இவ்வாறாக முதல் பாதி முடிவில் ஈகுவடாா் 2 – 0 என முன்னிலையில் இருந்தது. அடுத்த பாதியில் கடுமையாகப் போராடியும் கத்தாருக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியில் ஈகுவடாா் வெற்றியைப் பதிவு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here