இலங்கையை வீழ்த்திய நமீபியா – டெண்டுல்கர் என்ன சொன்னார்?

டி20 உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் ஆசியக் கிண்ண சாம்பியனான இலங்கையை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நமீபியா அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கிண்ண டி20 போட்டிகள் நேற்று (அக்டோபர் 16) தொடங்கின.

உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அண்மையில் நடந்து முடிந்த ஆசியக் கிண்ண போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

இந்நிலையில், நமீபியாவின் இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நமீபியாவின் பெயரை நினைவில் வைத்துக் கொள்க என கிரிக்கெட் உலகிற்கு நமீபியா கிரிக்கெட் அணி கூறியிருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here